காரில் ரிச்சர்ட் ராஜா மற்றும் அவரது மனைவி, 2 குழந்தைகள், சகோதரர் ஜான்சன் ஆகியோர் பயணம் செய்தனர். இன்று காலை கார் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. கடைசியில் கார் தடுப்புச்சுவரில் மோதி அதே வேகத்தில் தலைக்குப் புற கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த ரிச்சர்ட் ராஜாவின் மகன் ரோகித் காரின் இடி பாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
உயிருக்கு போராடிய மற்ற 4 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மெர்லின், ரோஷினி ஆகியோரும் பரிதாபமாக இறந்தனர். ரிச்சர்ட் ராஜா, ஜான்சன் ஆகிய 2 பேரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக சாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தாய், மகன், மகள் பலியானது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலை விபத்து: கணவர் கண் முன்னே மனைவி, 2 குழந்தைகள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.