கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு பாடுபட வேண்டும்: திமுக பொதுச்செயலாளர் வேண்டுகோள்

சென்னை: கர்நாடக மாநில சட்டப் பேரவை தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று திமுகவினருக்கு, பொதுச் செயலாளர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம்தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். மேலும், கர்நாடக மாநில திமுக அமைப்பு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளில் உள்ள நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் தேர்தல் பணிக்குழு அமைத்து, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு பாடுபட வேண்டும்: திமுக பொதுச்செயலாளர் வேண்டுகோள் appeared first on Dinakaran.

Related Stories: