இந்நிலையில் கவிழ்ந்த பேருந்தில் இருந்த 60 பேரில் 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. 60 பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர். இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வாழப்பாடி வட்டாட்சியர் ஜெயந்தி மற்றும் வருவாய் துறையினரும், சேலம் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் சுங்கச்சாவடி ஊழியர்கள் கிரேன் உதவியுடன் பேருந்தை மீட்டனர். அதில் காயமடைந்தவர்களை வாழப்பாடி அரசு மருத்துவமனையில் 9 பேரும், தனியார் மருத்துவமனையில் ஓட்டுநர் உள்பட்ட 2 பேரும், சேலம் அரசு மருத்துவமனையில் 5 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post வாழபாடி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்; 60 பயணிகள் நூலிழையில் தப்பினர்!! appeared first on Dinakaran.