×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி, பேரூராட்சிகளில் வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனடியாக மாநிலம் முழுவதும் நடத்த வேண்டும், சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் 2014ன் படி சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும், அனைவருக்கும் இலவச தள்ளுவண்டி வழங்கிட வேண்டும், அடையாள அட்டை கொடுக்காமல் விடுபட்டவர்களை கணக்கெடுத்து முறையாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி பஜாரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் வட்டத் தலைவர் ஜோசப் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு மாநில துணைத் தலைவர் விஜயன், மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் குப்பன், துணை தலைவர் மேரிடேவின், சிபிஎம் வட்டச் செயலாளர் ராஜேந்திரன், லட்சுமணன், உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சூரியபிரகாஷ், கட்டுமான சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சீனு உட்பட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,
× RELATED கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு...