திடீரென நீரில் மூழ்கியிருந்த நீர்யானை திடீரென வாயை பிளந்தபடி பராமரிப்பாளர் குமாரின் கழுத்தை கடித்தது. இதில் அவர் அலறி சத்தம் போட்டுள்ளார். இதை கேட்டு சக பணியாளர்கள் ஓடிவந்து, குமாரை காப்பாற்ற நீண்ட நேரம் போராடினர். ஒருவழியாக படுகாயத்துடன் அவரை மீட்டனர். பின்னர் அவரை பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பூங்கா நிர்வாக அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரபரப்பு நீர்யானை கடித்ததில் பராமரிப்பாளர் படுகாயம் appeared first on Dinakaran.