×

உபியில் ஓநாயை தொடர்ந்து குள்ளநரி அட்டகாசம்

சம்பல்: உத்தரப்பிரதேசத்தின் பக்ரைச் மாவட்டத்தில் குழந்தைகள் உட்பட மனிதர்கள் மீது ஓநாய்கள் தாக்கும் சம்பவம் மார்ச் முதல் நடந்து வருகின்றது. ஆனால் ஜூலை 17ம் தேதி முதல் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 51 பேர் காயமடைந்துள்ளனர். ஓநாய்களை சுட்டுக்கொல்வதற்காக 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உபியின் சம்பல் மாவட்டத்தில் மர்ம விலங்கு தாக்கியதில் 4 பேர் நேற்று காயம் அடைந்தனர். இதில், மாயா தேவி என்ற 60 வயது மூதாட்டியின் கையின் ஒரு பகுதியை அந்த விலங்கு துண்டித்து விட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மாயாதேவி சிகிச்சை பெற்று வருகிறார். இங்கு குள்ளநரி தாக்கியிருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

The post உபியில் ஓநாயை தொடர்ந்து குள்ளநரி அட்டகாசம் appeared first on Dinakaran.

Tags : UP ,Chambal ,Uttar Pradesh ,Bagraich district ,
× RELATED உபியில் பெண் வக்கீல் கடத்திக் கொலை