×

உபியில் பெண்களை குறி வைத்து கொலை செய்த சீரியல் கில்லர் கைது

பரேலி: உபி மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள ஷாஹி மற்றும் ஷீஷ்கர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 6 பெண்கள் ஒரே மாதிரி கொலை செய்யப்பட்டனர்.குறிப்பாக அவர்கள் கட்டியிருந்த சேலையால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறினர்.

கடந்த மாதம் ஹாஜ்பூர் மற்றும் காஜூரியா ஆகிய இடங்களில் 2 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். இப்படி தொடர்ந்து பெண்களை குறி வைத்து கொலை செய்து வந்த மர்ம நபரை பிடிக்க ஐஜி ராகேஷ் சிங் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாருக்கு கிடைத்த துப்புகளின் அடிப்படையில் மர்ம நபரின் வரைபடத்தை போலீசார் வெளியிட்டனர். இந்த நிலையில் கொலையில் தொடர்புடைய குல்தீப்(35) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். 6 பெண்களை கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

The post உபியில் பெண்களை குறி வைத்து கொலை செய்த சீரியல் கில்லர் கைது appeared first on Dinakaran.

Tags : UP Bareilly ,Shahi ,Sheeshkar ,Bareilly ,UP ,Dinakaran ,
× RELATED பாஜ ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர்,...