இவ்வளவையும் செய்து விட்டு, ஓபிசி பிரிவில் தகுதியானவர்கள் இல்லை என்று கூறி, அந்த இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, உயர்சாதியினரைக் கொண்டு நிரப்பப்படுகின்றன. இப்படித்தான் சமூகநீதி சூறையாடப்படுகிறது.
பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சமூகநீதி சூறையாடப்படுவதை தவிர்க்க, முதல் நடவடிக்கையாக கிரீமிலேயர் முறை ஒழிக்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் முழுக்க அவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும். அவற்றை பொதுப் பிரிவுக்கு மாற்றகூடாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு இதுவரை நிரப்பப்படாமல் இருக்கும் அனைத்து பணியிடங்களும், பின்னடைவு பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, அவற்றை ஓபிசியினரை கொண்டு நிரப்ப நடவடிக்கை வேண்டும்.
The post ஒன்றிய பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள் 4% மட்டுமே ஓபிசி வகுப்பினர்: ஒன்றிய அரசு மீது ராமதாஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.