அப்போது, அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்த நிலையில், அதிக கட்டணம் செலுத்த வேண்டுமென்று கல்லூரி நிர்வாகம் கூறியதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அடுத்த கல்வியாண்டிலேயே அந்த மாணவருக்கு வேறு கல்லூரியில் இடம் கிடைத்து அவர் மருத்துவ மேற்படிப்பை முடித்து விட்டார் என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட மாணவர், மருத்துவ மேற்படிப்பை முடித்திருந்தாலும், 2017-18ம் கல்வி ஆண்டில் அவருக்கு அனுமதி மறுத்தது தவறு. இதற்காக 15 லட்சம் ரூபாயை மனுதாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்.
இதில், புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனம் 10 லட்சம் ரூபாயும், தேர்வுக் குழு (சென்டாக்) ஐந்து லட்ச ரூபாயையும் நான்கு வாரங்களில் வழங்க உத்தரவிட்டனர். மேலும், சமூகத்திற்கு சேவை செய்வதாக கூறிக்கொண்டு மனசாட்சியே இல்லாமல் தனி நபர்களும், தனியார் நிறுவனங்களும் கல்வியை வணிக மயமாக்கியுள்ளனர். ‘‘எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு’’ என்று கல்வி குறித்து திருவள்ளுவர் கூறியுள்ளார். இந்த இரு கண்களும் தற்போது வணிக பொருட்களாக்கப்பட்டுள்ளது. அதனை வாங்குவதற்கு அதிக விலை கொடுக்க வேண்டியுள்ளது. தனியார் கல்லூரிகளில் இது போன்று நடக்காமல் இருக்க தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
The post தனி நபர்களாலும், தனியார் நிறுவனங்களாலும் மனசாட்சி இல்லாமல் கல்வி வணிகமாக்கப்பட்டுள்ளது: ஐகோர்ட் அமர்வு வேதனை appeared first on Dinakaran.
