இந்த சம்பவம் நடந்த போது குருவாயூர் எக்ஸ்பிரஸ் நாகர்கோவிலில் இருந்து புறப்பட தயார் நிலையில் இருந்தது. தகவல் அறிந்ததும் நிறுத்தப்பட்டது. மங்களூர் – எரநாடு எக்ஸ்பிரஸ் ரயில் திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையே நேற்று முன்தினம் இரவு ரத்து செய்யப்பட்டது. மீட்பு குழுவினர் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி அறுந்து மின் கம்பிகளை சரி செய்தனர். மண் சரிவும் சரி செய்யப்பட்டது. இதையடுத்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது. நேற்று காலையில் இருந்து வழக்கம் போல் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
The post அறுந்து விழுந்த மின் ஒயர்களால் ரயில் போக்குவரத்து கடும் பாதிப்பு appeared first on Dinakaran.