அப்போது, சிறுவன் அங்கு திடீரென மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடனே உறவினர்கள் சிறுவனை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் வரும் வழியிலே இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பட்டாபிராம் போலீசார், சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதில், 10 வயது சிறுவன் மரம் காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆவடி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளின், தகவல்களை மாவட்ட மருத்துவர் அதிகாரிகளுக்கு தெரிவிக்காத மருத்துவமனை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டம் தோறும் காய்ச்சலுக்காக வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர், மாவட்ட மருத்துவ அலுவலர் உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து கூறினர்.
The post பட்டாபிராமில் சோகம் மர்ம காய்ச்சலுக்கு மாணவன் பரிதாப பலி appeared first on Dinakaran.