மேலும் தக்காளியின் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பொதுமக்கள் தக்காளியின் விலை குறைந்துள்ளதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘தொடர்ந்து வரத்து அதிகரிப்பால் மார்க்கெட்டில் தக்காளியின் விலை குறைந்துள்ளது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் கடும் முயற்சியால் தக்காளியின் விலை குறைந்துள்ளது. மேலும் படிப்படியாக விலை குறையும்’’ என்றார்.
The post கோயம்பேடுக்கு வரத்து அதிகரிப்பால் தக்காளி ஒரு கிலோ ரூ.70க்கு விற்பனை appeared first on Dinakaran.