*தக்காளியை அப்படியே ஃபிரிட்ஜில் வைக்காமல் ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைக்கும் போது இன்னும் சில காலங்கள் தக்காளியின் வாழ்நாள் நீடிக்கும்.
*ரசம் வைக்கும் போது புளி, எலுமிச்சை போன்றவை பயன்படுத்தலாம்.
*சாம்பாருக்கு வெறும் ஒரு தக்காளி பயன்படுத்திவிட்டு சாம்பார் நன்கு கொதி வந்த நிலையில் ஒரு எலுமிச்சை பிழிந்து இறக்க அதன் சுவை வித்யாசமாக இருக்கும்.
*பிரியாணிக்கு பெயருக்கு ஒரு தக்காளி சேர்த்துவிட்டு , உடன் தயிர் மற்றும், எலுமிச்சை சேர்க்கலாம்.
*தக்காளியை ஒரு கிலோ வாங்கும் தருவாயில் அதனை நன்கு வதக்கி, அரைத்து பேஸ்ட்டாக மாற்றி டப்பாக்களில் சேமித்து வைத்து சமையலில் அரை ஸ்பூன், கால் ஸ்பூன் வீதம் பயன்படுத்தலாம். சுவையும் கூடும், மேலும் *தக்காளியும் நீண்ட நாட்களுக்கு தாங்கும்.
*தக்காளி விதைகளைக் கூட விடாமல் அவற்றை வீட்டில் உள்ள தொட்டிகளில் இட்டு செடியாக வளர்க்கலாம். மேலும் தக்காளி பழம்தான் விலை அதிகம். தக்காளி விதைகள் விலை குறைவுதான் என்கிற நிலையில் மாடித் தோட்டங்கள் போட்டு தக்காளியை வீட்டிலேயே பயிரிடலாம்.
*தக்காளிச் சட்னி நினைத்துக் கூட பார்க்க முடியாது, எனினும் இம்மாதிரியான நேரங்களில் ஆசை வருவது இயல்பு. வெங்காயத்துடன் தக்காளி சாஸ்களைப் பயன்படுத்தினால் தக்காளி சட்னி அளவிற்கு சுவை கிடைக்காவிட்டாலும் ஓரளவிற்கு தக்காளி சட்னி சாப்பிட்ட திருப்திஉண்டாகும்.
– ஷாலினி நியூட்டன்
The post அடத தககாளியே! appeared first on Dinakaran.