இந்த நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக, தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து மேட்லி சாலை, பார்டர் சாலை வழியாக, மாம்பலம் ரயில் நிலையம் வரை 13 அடி அகலத்தில், 1,968 அடி நீளத்திற்கு நடை மேம்பாலம் அமைக்க, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.30 கோடி செலவில் திட்டமிடப்பட்டது. ஆனால், 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக பணிகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
*மாம்பலம் ரயில் நிலையத்தை மேட்லி சந்திப்புக்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் அழகிய வடிவமைப்பில் 570 மீட்டர் நீளம், 4.2 மீட்டர் அகலமுள்ளளதாக அமைக்கப்பட்டுள்ளது.
*இந்தியாவில் மிக நீளத்தில் அமைக்கப்பட்ட நடைமேம்பாலம் இதுதான். இந்த நடைபாதை மேம்பாலத்தின் இரு முனைகளிலும் லிப்ட், பேருந்து நிலைய முனையில் ஒரு எஸ்கலேட்டர், மாம்பலம் காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு, பொது முகவரி அமைப்பு மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
*மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சக்கர நாற்காலி வசதி உள்ளிட்டவை உள்ளன.
*ஆகாய நடை மேம்பாலத்தின் அருகில் உள்ள மரங்களில் வண்ணப் பறவைகளின் உருவங்களும் வரையப்பட்டுள்ளது.
*நடைமேம்பாலத்தின் உட்புற பகுதிகளில் உள்ள தூண்களில் தமிழ்நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.
The post திநகரில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான ஆகாய நடை மேம்பாலம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!! appeared first on Dinakaran.