இந்த நிலையில், 13 ஆண்டுகளில் 1,030 விபத்துகளை கண்ட சேலம் – தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையான தொப்பூர் சாலையில் ரூ.775 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்டுகிறது. தொப்பூர் கட்டமேடு பகுதியிலிருந்து சேலம் மாவட்டம் எல்லை பகுதி வரை சுமார் 6.6 கிலோ மீட்டர் நீளத்திற்கு சுமார் 775 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. 6.6 கிமீ தொப்பூர் சாலையில் சேலம் செல்வதற்கு 3வழி மேம்பாலமும், தர்மபுரி செல்ல 4 வழி மேம்பாலமும் அமைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து மேம்பாலம் அமையக்கூடிய பகுதிகளை தருமபுரி நாடாளுமன்ற திமுக உறுப்பினர் மருத்துவர் செந்தில்குமார் மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் உயர்மட்ட பாலம் அமையவுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
The post 13 ஆண்டுகளில் 1,030 விபத்துகளை கண்ட கொலைகார தொப்பூர் சாலையில் ரூ.775 கோடி மதிப்பில் அமைகிறது உயர்மட்ட பாலம்!! appeared first on Dinakaran.