அரசு மிகுந்த சிரமப்பட்டு அரிசி கொம்பனை பிடித்தது; யானையை இங்கே விட வேண்டும், அங்கே விட வேண்டும் என்று உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை

மதுரை: தமிழ்நாடு அரசு மிகுந்த சிரமப்பட்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து அரிசி கொம்பன் யானையை பிடித்துள்ளது என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. யானையை இங்கே விட வேண்டும், அங்கே விட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டதாக தெரிகிறது. அரிசி கொம்பன் யானையை கேரளாவின் மதிக்கெட்டான் சோலை தேசிய பூங்கா, சின்னக்கானல் பகுதிக்கு செல்லும் வகையில் விடக் கோரி எர்ணாகுளத்தை சேர்ந்த ரபேக்கா ஜோசப் தொடர்ந்த வழக்கை யானைகள், காடுகள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post அரசு மிகுந்த சிரமப்பட்டு அரிசி கொம்பனை பிடித்தது; யானையை இங்கே விட வேண்டும், அங்கே விட வேண்டும் என்று உத்தரவிட முடியாது: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Related Stories: