இம்பால் ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தகவல் பரவிய நிலையில் தவுபால் மற்றும் காக்சிங் மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் பல்லெல் பகுதிக்கு விரைய முற்பட்டனர். ஆனால் அவர்களை அசாம் ரைபிள் படையினர் தடுத்து நிறுத்தினார்கள். இந்நிலையில் அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய குழுக்களுக்கு இடையே நடந்த மோதலில் 48வயது நபர் கொல்லப்பட்டார். 45 பெண்கள் காயமடைந்தனர். அசாம் ரைபிள் படையினர் கண்ணீர் புகை குண்டு வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மற்றொருபுறம் இம்பாலில் இருந்து பல்லேல் செல்ல முயன்ற ரைபிள் படை வீரர்கள் தவுபாலில் உள்ளுர்வாசிகளால் சிறைப்பிடிக்கப்பட்டனர். இதனால், பதற்றம் அதிகரித்துள்ளது.
The post மணிப்பூரில் தொடரும் பதற்றம் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி, 45 பேர் காயம் appeared first on Dinakaran.