தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பாறையின் இடுக்கில் சிக்கி உயிரிழந்த பெண் யானையின் சடலத்தை மீட்டு வனத்துறையினர் அடக்கம் செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள பாறை அருகே இருக்கும் நீரோடை பகுதிகளில் துர்நாற்றம் வீசியது.
அதனை அடுத்து அங்கு சென்று பார்த்தபோது பாறையின் இடுக்கில் சிக்கி பெண் யானை இறந்திருப்பதை பற்றி கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உயிரிழந்த யானைக்கு 15 வயது இருக்கும் என்றும் பெரிய பாறையின் வழியே இறங்கி வரும் போது தவறி கீழே விழுந்து இறந்திருக்கக் கூடும் என வனத்துறையினர் தெரிவித்தனர். சுமார் 15 நாட்களுக்கு முன்பே உயிரிழந்த யானைக்கு உடற்கூறாய்வு முடிந்து அடக்கம் செய்யப்பட்டது.
The post தென்காசியில் பாறையின் இடுக்கில் சிக்கி பெண் யானை மரணம்: 15 வயதுடைய யானை உடற்கூறாய்வுக்கு பிறகு அடக்கம் appeared first on Dinakaran.
