பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், ‘‘தமிழ்நாட்டு திருக்கோயில்களின் சார்பில் 4 கன்டெய்னர் லாரிகள் மூலம் ரூ.40 லட்சம் மதிப்பிலான 10 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள் அனுப்பப்பட்டு உள்ளது. சபரிமலையில் ஒரு மணி நேரத்துக்கு 3,500 பக்தர்கள் மட்டுமே தரிசிக்கும் சூழல் உள்ளது. எனினும், அங்கு நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வருகையினால் ஐயப்பனை தரிசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இருப்பினும், ஐயப்ப பக்தர்கள் விரைவாக தரிசிப்பதற்கு கேரள அரசு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கிடைத்த அனுபவத்தை வைத்து, குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதல் சிறப்பு வசதிகளை செய்து முடித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் அப்பணிகளை விரைந்து மேற்கொள்வோம்,’’ என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் சங்கர், திருமகள், இணை ஆணையர்கள் லட்சுமணன், ஜெயராமன், மங்கையர்க்கரசி, ரேணுகாதேவி, உதவி ஆணையர்கள் முத்து, ரத்தினவேல், அரவிந்தன், வானகரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜமுனா சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தமிழ்நாடு திருக்கோயில் சார்பில் சபரிமலை பக்தர்களுக்கு 4 லாரிகளில் ரூ.40 லட்சத்தில் பிஸ்கட் பாக்கெட்: அமைச்சர் சேகர்பாபு அனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.