இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு குறித்த சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை ஏந்திச் செல்வார்கள். அதேபோன்று தமிழ்நாடு நாள் முக்கியத்துவத்தை இளைய தலைமுறையினரும் அறியும் வகையில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது. 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை அனைத்து மாவட்ட தலைநகரங்களில், இச்சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறும். அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, மாநிலக் கல்லூரியில் 18ம் தேதி அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில், அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டு தமிழ்த்தாய் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளனர். மேலும், தமிழ்நாடு நாள் கருத்தரங்கில் வளர்க தமிழ்நாடு எனும் தலைப்பில் சுப.வீரபாண்டியன் , வாழ்க தமிழ்நாடு எனும் தலைப்பில் முனைவர் மா.ராசேந்திரன் , எழுக தமிழ்நாடு எனும் தலைப்பில் ஆழி செந்தில்நாதன் உரையாற்ற உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த சிறப்புகளை பொதுமக்கள் அறியும் வண்ணம், சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் பேரணி மற்றும் புகைப்படக் கண்காட்சி appeared first on Dinakaran.