செப்டம்பர் மாதம் 27ம் தேதி இவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டியதாக பெருங்கடலின் டீகோ கார்சியா தீவில் பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகள் இவர்களையும், 2 படகுகளையும் சிறைபிடித்தனர். இவர்களது படகிலிருந்த மீன்பிடி உபகரணங்களையும், இவர்கள் பிடித்து வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான மீன்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த மீனவர்களை கடந்த 3ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். 32 மீனவர்களையும் படகுகளையும் மீட்க சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
The post டீகோ கார்சியா தீவில் 32 தமிழ்நாடு, கேரள மீனவர்கள் சிறைபிடிப்பு appeared first on Dinakaran.