ஒரு நிகழ்வில் குறைந்தபட்சம் 1,000 மாணவர்கள் பங்கேற்றுப் பயன்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரத்தில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் நேற்று நடைபெற்ற தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு கலந்துகொண்டு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை குறித்து மாணவ – மாணவியர்களிடையே உரையாற்றினார். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 5 கல்லூரிகளில் இருந்து மாணவ – மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் வில்சன், அரசு அலுவலர்கள், மாணவ – மாணவியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
The post தாம்பரத்தில் தமிழ் கனவு நிகழ்ச்சி: இறையன்பு, கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.