இதுபற்றி கருப்பையா ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய 1 லட்சம் ரூபாய் நோட்டுகளை, நேற்று முன்தினம் தாசில்தாரிடம் கருப்பையா கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு துறையினர், தாசில்தார் தென்னரசை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதனிடையே, தாசில்தார் தென்னரசின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி ஜெயராம் நகரில் உள்ள வீட்டில், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, விருதுநகர் இன்ஸ்பெக்டர் சால்வன் துரை தலைமையிலான போலீசார் நேற்று மாலை 4 மணியளவில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ..45 லட்சம் பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றினர். இரவு வரை தொடர்ந்து சோதனை நடைபெற்றது.
The post ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கி கைதான தாசில்தார் வீட்டில் சோதனை ரூ.45 லட்சம் பறிமுதல்: அருப்புக்கோட்டையில் பரபரப்பு appeared first on Dinakaran.