இந்த சம்பவம் குறித்து, உடனடியாக மாங்காடு போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாங்காடு இன்ஸ்பெக்டர் ராஜி தலைமையிலான போலீசார், இறந்த கணவன், மனைவியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்தனர். போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடந்த சில தினங்களாக அம்பிகா வேறு யாருடனோ செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட தனஞ்செழியன் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலையும் அது போலவே இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த தனஞ்செழியன் மனைவியை தனது பெல்டால் அடித்து, உதைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் மனைவி இறந்ததும், போலீசாரின் வழக்கு விசாரணைக்கு பயந்து தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post நடத்தையில் சந்தேகப்பட்டு பெல்டால் கழுத்தை இறுக்கி மனைவி கொடூர கொலை: கணவனும் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.