அப்போது அவர், இருக்கையில் அமர்ந்து, வருகை பதிவேட்டை சரிபார்த்தார். இதுகுறித்து மாணவர் தர்சன் கூறுகையில், “காலாண்டு தேர்வில் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் எடுத்ததற்காக, என்னை ஒருநாள் தலைமை ஆசிரியர் பொறுப்பில் அமர வைத்துள்ளார். இது எனக்கு பெருமையாக உள்ளது. அதிக மதிப்பெண் எடுக்க தொடர்ந்து படித்து கொண்டிருந்தேன். பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண் எடுப்பேன்’’ என்றார். தான் படித்து வரும் பள்ளியில் ஒரு நாள் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற மாணவர் தர்சனுக்கு, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
The post ஒரு நாள் தலைமை ஆசிரியர் மாணவனுக்கு சர்பரைஸ்! appeared first on Dinakaran.