வாழ்வாதாரத்தை சீரழித்த பாஜ மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்: செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வரவேற்பு பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாத பிரதமர் மோடி, நச்சுத்தனமான கருத்துகளை கூறியிருக்கிறார். மோடி ஆட்சியில் ஏழைகளின் வாழ்வாதாரம் உயர்ந்ததை விட கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை தான் அதிகரித்து வருவதாக சர்வதேச ஆய்வறிக்கை கூறியிருக்கிறது. கீழ்நிலையில் உள்ள 50 சதவிகித மக்களின் சொத்து பல மடங்கு குறைந்திருக்கிறது. இதுதான் மோடி ஆட்சியில் நிலவுகிற வருமான சமத்துவமின்மையின் அடையாளம். வாழ்வாதாரம் சீரழிக்கப்பட்டு, பொருளாதார பாதிப்பின் காரணமாக பாஜ ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். தேர்தலில் பாஜக ஆட்சி அகற்றப்பட்டு இந்தியா கூட்டணி அமைவது உறுதி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வாழ்வாதாரத்தை சீரழித்த பாஜ மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: