×

மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்

திங்கள்சந்தை: குமரி மாவட்டம் இரணியல் அருகே கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருப்பவர் அருள் ஜீவன் (47). இவர், 8ம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து மாணவனின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், ‘கடந்த 14ம் தேதி எனது மகன் மதிய உணவு இடைவேளையில் உணவு சாப்பிட்டுவிட்டு கழிப்பறைக்கு சென்றுவிட்டு வந்து இருக்கிறான். அப்போது எனது மகனின் தோளில் கையைப் போட்ட ஆசிரியர் அருள் ஜீவன் ஆய்வுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று தகாத உறவில் ஈடுபடுத்தியுள்ளார்’ என கூறி இருந்தார். இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இந்நிலையில் ஆசிரியர் அருள்ஜீவனை, மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

The post மாணவனுக்கு பாலியல் தொந்தரவு அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : School ,Arul Jeevan ,Gangathuvila Government Higher School ,Kumari District Ranathiya ,
× RELATED தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் ஆர்எம்கே பள்ளி மாணவர் தங்கப் பதக்கம்