அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, 4 மாணவர்களையும் அழைத்து பள்ளி நேரத்தில் எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு மாணவர்கள், ஆசிரியர் ஜூஸ் வாங்க அனுப்பியதாக தெரிவித்தனர். தொடர்ந்து முதன்மை கல்வி அலுவலர், பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்தார். அப்போது ஆசிரியர், மாணவர்களை ஜூஸ் வாங்க அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட ஆசிரியருக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யும்படி தலைமை ஆசிரியரிடம் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
The post மாணவர்களை ஜூஸ் வாங்க அனுப்பிய ஆசிரியர் சம்பளத்தை பிடித்த சிஇஓ appeared first on Dinakaran.