×

3 நாட்களாக சரிந்து வந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 0.75% வரை உயர்ந்து முடிந்தன..!!

மும்பை: தொடர்ந்து 3 நாட்களாக சரிந்து வந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 0.75% வரை உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 496 புள்ளிகள் உயர்ந்து 71,683 புள்ளிகளானது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின. பார்த்தி ஏர்டெல் பங்கு 3.5%, என்.டி.பி.சி. பங்கு 3%, டெக் மகிந்திரா பங்கு 2.5% விலை உயர்ந்து விற்பனையாயின.

டாடா ஸ்டீல், எம்&எம், அல்ட்ராடெக் சிமென்ட் பங்குகள் தலா 2%, டைட்டன் பங்கு 1.97% விலை உயர்ந்தன. ஆக்சிஸ் வங்கிப் பங்கு 1.69%, JSW பங்கு 1.5%, எல்&டி, ஐ.டி.சி., ஐசிஐசிஐ வங்கிப் பங்குகள் தலா 1% விலை உயர்ந்தன. இண்டஸ்இண்ட் வங்கி, கோட்டக் வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி, அதானி எண்டர்பிரைசஸ் உள்ளிட்ட பங்குகள் விலை குறைந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 160 புள்ளிகள் அதிகரித்து 21,022 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

The post 3 நாட்களாக சரிந்து வந்த பங்குச்சந்தை குறியீட்டு எண்கள் 0.75% வரை உயர்ந்து முடிந்தன..!! appeared first on Dinakaran.

Tags : MUMBAI ,BSE Sensex ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு!!