எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 32 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்!

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களது 3 படகுகளையும் பறிமுதல் செய்து அட்டூழியம் செய்துள்ளது. மேலும் 14 ராமேஸ்வரம் மீனவர்களை சிறை பிடித்து இலங்கை கடற்படை அராஜகம்.

இன்று ஒரே நாளில் 32 மீனவர்களையும், 5 படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவுள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 32 பேரை கைது செய்யப்பட்ட சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி 32 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம்! appeared first on Dinakaran.

Related Stories: