கொழும்பு: இலங்கை சிறையில் இருந்த மேலும் 38 தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். நேற்று 4 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில் 38 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 67 தமிழக மீனவர்கள் கைதாகி இலங்கை சிறையில் வைக்கப்பட்ட நிலையில் அதில் 42 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததால் மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 38 மீனவர்களும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post இலங்கை சிறையில் இருந்த மேலும் 38 தமிழக மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை..!! appeared first on Dinakaran.