மேலும், தேவஸ்தானத்தின் அறிவிப்பின்படி, சபரிமலை கோவில் வரும் டிசம்பர் 27ம்தேதி முதல் 30ம் தேதி மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால், இதனை கருத்தில் கொண்டு டிச.26ம் தேதி முதல் 29ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. மேலும் சென்னை மற்றும் இதர இடங்களிலிருந்து கூடுதலாக பேருந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பேருந்துகளை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். தனிடையே, 30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்பு பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலமாக, www.tnstc.in மற்றும் TNSTC official app ஆகிய இணையத்தளங்களில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014452, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
The post சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் : போக்குவரத்து துறை அறிவிப்பு appeared first on Dinakaran.