வெள்ள பாதிப்பில் 40 பேர் உயிரிழந்த நிலையில், 22 ராணுவ வீரர்கள் உட்பட 120 பேர் காணாமல் போனதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டதில் ஒரு ராணுவ வீரர் பத்திரமாக மீட்கப்பட்டார். மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே சுங்தாங் அணையின் முந்தைய நிலை மற்றும் தற்போதைய நிலை என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் புகைப்படம் பெரு வெள்ளத்தில் கோர முகத்தை காட்டுவதாக உள்ளது. அதற்கேற்ப பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
The post சிக்கிமில் மேகவெடிப்பால் பெருவெள்ளம் – அணை உடைந்து கடும் சேதம்… 40 பேர் உயிரிழப்பு; 120 பேர் மாயம்!! appeared first on Dinakaran.