சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45 ஆயிரத்தை தாண்டியது: மீண்டும் எகிறியது தங்கம் விலை

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் தங்கம் விலை குறைந்து வந்தது. இதை தொடர்ந்து, தீபாவளிக்கு பின்பும் தங்கம் விலை இறங்கிக் கொண்டே வந்ததால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் தங்கம் வாங்கினார். ஆனால் தீபாவளி முடிந்ததும் தற்போது மீண்டும் ஏற்றம் கண்டிருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நேற்றும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.5,645 ஆக உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45,160 ஆக உள்ளது. சவரன் தங்கம் விலை ரூ.45 ஆயிரத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் வரை 45 ஆயிரத்துக்கு கீழ் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது தங்கம் விலை எகிற தொடங்கியுள்ளதால் நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.45 ஆயிரத்தை தாண்டியது: மீண்டும் எகிறியது தங்கம் விலை appeared first on Dinakaran.

Related Stories: