×

செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்!

டெல்லி: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, ஜார்ஜ் மஸி அமர்வு விசாரித்தது. அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் நேற்று முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்தாண்டு ஜூன் 14-ம் தேதி செந்தில், பாலாஜி கைது செய்யப்பட்டார்.

 

The post செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது நாளை தீர்ப்பளிக்கிறது உச்சநீதிமன்றம்! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Balaji Jamin ,Delhi ,minister ,Sendil Balaji Jamin ,ABAI OKA ,GEORGE MASSEY ,Senthil Balaji ,
× RELATED நீதிமன்ற காவலில் இருக்கும்...