×

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்..!!

சென்னை: செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா? என்பதை ஐகோர்ட் முடிவெடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தன்னால் விசாரிக்க முடியாது என சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரவி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை கைது செய்த வழக்கில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது சிறப்பு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றத்தை நாட உத்தரவிட்ட நிலையில் விசாரிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை நாட சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தல்..!! appeared first on Dinakaran.

Tags : Special Court ,Madras High Court ,Senthil Balaji ,CHENNAI ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!