நிகழ்ச்சியில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க இயக்குநர் ஹித்தேன் ஜோஷி உட்பட பல்வேறு விளையாட்டு சங்கங்களின் நிர்வாகிகள் உடன் இருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய ஆதவ் அர்ஜூனா, ‘தமிழ்நாட்டு வீரர் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்கிற இலக்கு விரைவில் நனவாகும். அதற்கு முன்னோட்டமாக தான் ஆசிய விளையாட்டு போட்டியில் அதிக பதக்கங்களை வென்றுள்ளோம். ஆசிய விளையாட்டில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளை பாராட்ட விரைவில் பிரமாண்ட விழா நடத்தப்படும். அதில் சம்பந்தப்பட்ட வீரர், வீராங்கனைகள் தங்கள் பெற்றோருடன் கலந்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.
The post கோவாவில் தேசிய விளையாட்டு தமிழக வீரர்களுக்கு வழியனுப்பு விழா: தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் ஏற்பாடு appeared first on Dinakaran.