சேவாக் போல் விளையாடக்கூடிய ஒரு வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேவை. அந்த திறன் அபிஷேக் ஷர்மாவிடம் அதிகமாக உள்ளது. எனவே விரைவில் அவரை டெஸ்ட் அணியில் நாம் பார்க்கலாம். டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அதிரடி காட்டுவார். தற்போது ரஞ்சி கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அவர் தான் இருக்கிறார். அவருடைய நாளாக இருந்தால் எதிரணியிடமிருந்து போட்டியை எளிதாக கவர்ந்து சென்று விடுவார். டிராவிஸ் ஹெட்டும் இதை தான் செய்து வருகிறார். சேவாக், விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற ஜாம்பவான்கள் இதை தான் செய்தார்கள். இதுபோன்ற வீரர்களால் தான் டெஸ்ட் கிரிக்கெட் இன்னும் சுவாரஸ்யமாக மாறும்’’ என்றார்.
The post சேவாக்போல் அபிஷேக் ஷர்மா: ஹர்பஜன் சிங் பாராட்டு appeared first on Dinakaran.