அந்தவகையில், கடந்த நிதியாண்டில் இதுவரை இல்லாத வகையில் ரூ.17,253 கோடி வசூல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. கடந்தாண்டில் ஜூலை மாத முடிவு வரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாயைவிட நடப்பு ஆண்டின் ஜூலை மாதம் முடிவில் அதிக வருவாய் வசூலிக்கப்பட்டு பதிவுத்துறை நடப்பு நிதியாண்டிலும் சாதனை படைத்துள்ளது. அதன்படி, கடந்த நிதி ஆண்டில் 2022 ஜூலை 31ம் தேதி வரை வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.5539.06 கோடியாகும். ஆனால் தற்போதைய நடப்பு ஆண்டின் 2023 ஜூலை 31ம் தேதி வரை பத்திரப்பதிவுத்துறையில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாய் ரூ.5611.47 கோடியாகும். அந்தவகையில், வரலாற்று சாதனை படைக்கப்பட்டதாக கருத்தப்பட்ட கடந்தாண்டு சாதனையை காட்டிலும் நடப்பாண்டில் ஜூலை மாதம் வரை பத்திரப் பதிவுத்துறை அதிக வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பத்திரப்பதிவுத்துறையில் புதிய சாதனை நடப்பாண்டு ஜூலை வரை ரூ.5,611 கோடி வசூல்: வணிகவரி மற்றும் பதிவுத்துறை தகவல் appeared first on Dinakaran.