பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் மாணவர்கள் வரவில்லை. இதேபோல் காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று திறக்கப்பட இருந்த காட்டூரில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிக்கும் இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெற்றோரின் செல்போனுக்கு விடுமுறை என தகவல் அனுப்பியதால் மாணவர்கள் வரவில்லை.
போலீசார் சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதுகுறித்து திருச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், ‘ஸ்வேதா கிருஷ்ணன்’ என்ற பெயரில் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தெரிய வந்தது. போலி ஐடியை உருவாக்கி வெடிகுண்டு மிரட்டல் விடுவிக்கப்பட்டதா அல்லது வெளிநாட்டில் இருந்து மிரட்டல் மெயில் வந்ததா? என்று விசாரணை நடக்கிறது.
The post 8 பள்ளிகள், கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.