பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,400.. கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,500… உணவுத் தொகையை உயர்த்தி வழங்கிய தமிழக அரசு!!

சென்னை : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான உணவுக்கான உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. முன்னதாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,000 ஆகவும் அதேபோல, கல்லூரி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,500 ஆகவும் இருந்தது.

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 4ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் மாநாட்டு கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கான உணவு உதவித் தொகையை உயர்த்தி அறிவித்தார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் உண்டி உறைவிடப் பள்ளிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான உணவுத்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1400-ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கான உணவுத் தொகை ரூ.1,100-ல் இருந்து ரூ.1,500-ஆகவும் உயர்த்தி வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,400.. கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,500… உணவுத் தொகையை உயர்த்தி வழங்கிய தமிழக அரசு!! appeared first on Dinakaran.

Related Stories: