இதுகுறித்து அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியன், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியாக 2 அவதூறு வழக்குகளை தொடர்ந்தார். இந்த வழக்குகள் பொறுப்பு நீதிபதி வெங்கடேசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. 3வது முறையாக நேரில் ஆஜரானார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆஜராகி வாதிட்டார். பின்னர் விசாரணையை வரும் டிசம்பர் 21ம் தேதிக்கு பொறுப்பு நீதிபதி வெங்கடேசன் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
The post முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில்… அதிமுக எம்.பி.சி.வி. சண்முகம் 3வது முறையாக நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்!! appeared first on Dinakaran.