சேலம் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் அருகே மல்லூரில் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற விவசாயி சென்னன் (65), மகள் சுதா (38) மற்றும் பேரன் விஷ்ணு (12) விபத்தில் உயிரிழந்தனர்.

சேலம் மல்லூர் பகுதியில் உள்ள திப்பம்பட்டியை சேர்ந்த சென்னன் என்பவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் தனது மகளின் குடும்பத்தை சமயபுரம் கோயிலுக்கு அழைத்து செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மல்லூர் பகுதியில் உள்ள பைக் ஸ்டாண்டில் நிறுத்துவதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, சேலத்திலிருந்து நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மோதியதில் சென்னன், அவரது மகள் சுதா மற்றும் பேரன் விஷன் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக தகவலறிந்த மல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று லாரி ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த மூவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கோயிலுக்கு சென்றபோது விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சேலம் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: