ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்டுள்ள குறை தீர்ப்பாளர் அதே அதிகார எல்லைக்குட்பட்டு பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்திற்கும் (ஊரகம்) குறை தீர்ப்பாளராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) நடைமுறைப்படுத்துவதில் குறைகளை தீர்ப்பதற்காக சைமன் அருள் பிரகாசம் என்பவர் திருவள்ளூர் மாவட்டத்திற்கான குறை தீர்ப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருடைய செல்போன்: 8925811340 மற்றும் மின்னஞ்சல் முகவரி simon07071972@gmail.com ஆகும். பொதுமக்கள் மற்றும் பிரதம மந்திரி குடியிருப்பு (ஊரகம்) திட்டத்தின் கீழ் பயனடைவோர் இத்திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறை தீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

The post ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு மாவட்ட அளவில் குறை தீர்ப்பாளர் அலுவலகம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: