இதனால் குடிநீரும் மாசுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் செங்குன்றம் அருகே உள்ள தீர்த்தங்கரையம்பட்டு ஊராட்சி அலுவலகம் அருகே குப்பைகள் சிதறிக் கிடக்கிறது. எனவே மழைக்காலங்களில் இந்த குப்பைகளுடன் மழைநீர் தேங்கி கழிவு நீராக மாறும் சூழ்நிலை உள்ளது. எனவே கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற மர்ம காய்ச்சல் உருவாக வாய்ப்புள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட சுகாதார துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து ஆங்காங்கே உள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்றி நோய் வராமல் தடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post செங்குன்றம் பகுதிகளில் கொட்டப்படும் குப்பை, இறைச்சி கழிவுகளால் நோய் பரவும் அபாயம்: அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.