மேலும் மகாராஷ்டிராவின் மும்பை, தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, துலே, ஜல்கான் மற்றும் நாசிக் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜி-20 மாநாடு நாளை டெல்லியில் தொடங்க உள்ள நிலையில், மாநாடு நடைபெறும் இடமான பாரத மண்டபத்தை சுற்றிலும் நாளையும், நாளை மறுநாளும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அடுத்தடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
The post மீண்டும் பருவமழை தொடங்கியதால் ஜி-20 மாநாடு பகுதியில் மழை பெய்யும்: இந்திய வானிலை மையம் கணிப்பு appeared first on Dinakaran.