குடியிருப்புகளுக்கான மின் கட்டணத்தையே குடியிருப்பு பொது பயன்பாட்டிற்கும் நிர்ணயிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் நகர்ப்புறமயமாக்கல் அதிகமாகிக் கொண்டே வருகின்ற சூழ்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும், பிற நகர்ப்புற பகுதிகளிலும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மிகப் பெரிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளைத்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எவ்வித நிபந்தனைகளுமின்றி, குடியிருப்பு பயன்பாட்டிற்கான மின் கட்டணத்திற்கு இணையாக குடியிருப்பு பொதுப் பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை குறைத்து, அனைத்துத் தரப்பு மக்களையும் மின் கட்டண உயர்விலிருந்து ஓரளவாவது பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post குடியிருப்புகளுக்கான மின் கட்டணத்தையே குடியிருப்பு பொது பயன்பாட்டிற்கும் நிர்ணயிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: