இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என டெல்லி காவல்துறைக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில், போலி வீடியோ விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தியத் தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது போன்ற போலி வீடியோவை உருவாக்கி வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என ஏற்கனவே ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
The post நடிகை ராஷ்மிகாவின் டீப் ஃபேக் ஆபாச வீடியோ.. 5 பிரிவுகளின் கீழ் டெல்லி போலீஸ் வழக்கு appeared first on Dinakaran.