பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சாவு குற்றவாளிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு உறவினர்கள் திடீர் சாலை மறியல்

*போலீசார் பேச்சுவார்த்தை: திட்டக்குடி அருகே பரபரப்பு

திட்டக்குடி : பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள வாகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் (எ) செந்தாமரை (43). இவர் தனியாக இருந்த அப்பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியை கடந்த 22ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி அவரது தந்தையிடம் கூறிவிட்டு திடீரென வீட்டுக்குள் சென்று கதவை மூடிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

உடனே பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுமியை மீட்டு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி ேநற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

இந்நிலையில் செந்திலுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம பெண்கள் திட்டக்குடி- ராமநத்தம் மாநில நெடுஞ்சாலையில் சாலையில் வாகையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலின்பேரில் திட்டக்குடி, ராமநத்தம் போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி கைது செய்யப்பட்ட நபர் மீது கடுமையான எடுக்கப்படும் உறுதி அளித்ததன்பேரில் அவர்கள், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சாவு குற்றவாளிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு உறவினர்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: