இதனால் அச்சமடைந்த மீனவர்கள் அங்கிருந்து படகுகளை உடனடியாக வேறு பகுதிக்கு ஓட்டிச் சென்றனர். இரவு முழுவதும் ஆழம் குறைந்த கரை கடல் பகுதியில் மீன்பிடித்த மீனவர்கள், நேற்று காலை ராமேஸ்வரம் திரும்பினர். கரை திரும்பிய மீனவர்களின் படகுகளில் மீன்பாடு குறைவாக இருந்தது. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து வந்த ராமேஸ்வரம் மீனவர்கள், ஐந்து நாட்களுக்குப்பின் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடலுக்கு சென்றனர். இலங்கை கடற்படையின் நடவடிக்கையால் குறைவான மீன்களுடன் கரை திரும்பியதாக மீனவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
*கடற்கொள்ளையரும் மிரட்டல்; வலை பறிப்பு
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் இருந்து நேற்று முன்தினம் மதியம் பைபர் படகில் ராமகிருஷ்ணன் (60), மதியழகன் (60), நெடுஞ்செழியன் (55) ஆகியோர் கடலுக்கு சென்றனர். நேற்று கோடியக்கரைக்கு தென்கிழக்கே 10 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஒரு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 3 பேர், இவர்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ஜிபிஎஸ் கருவி, செல்போன், பேட்டரி மற்றும் மீன்களை பறித்துக் கொண்டு விரட்டியடித்தனர். இதையடுத்து கரை திரும்பிய மீனவர்கள் ஆறுகாட்டு துறை பஞ்சாயத்தாரிடம் தகவல் அளித்தனர். புகாரின்படி வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
The post 5 நாட்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது appeared first on Dinakaran.